Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி,சோனியா?




இந்தியன் கொடுத்த ஆயுதம், இந்தியன் கொடுத்த ஆதரவு, எங்கள் தமிழ் உறவுகளை எவ்வாறு ஆக்கியது என்று பார்த்து மகிழுங்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சோனியா? தமிழக உறவுகளே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தமிழ இரத்தமென்றால் இதற்கு நல்ல தீர்ப்புச் சொல்லுங்கள். நேற்று நள்ளிரவ முதல் நடக்கும் இனப்படுகொலையில் பலியாகும் ஈழத்து உறவுகள்

கலா மாஸ்டருக்கு கலைஞர் கடுங் கண்டனம்.


கலைஞர் தொல்லைகாட்சியின் டான்ஸ் மாஸ்டர் கலாவைக் கலைஞர் கண்டித்தாராம். விசய டிவில வந்த டான்ஸ் புரோக்கிறாமில தமிழநாடே கட்டுடுண்போன கடுப்புலதான் கலைஞர் இவ்வாறு கண்டித்தாராம்.
இதனால் அவசரமாக குஸ்பு ரம்பா கலா ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கையிலயும், பயிற்சிலயும் இருகாங்களாம்.

செய்தி

கலைஞர் உண்ணாவிரதம் நிறைவு ஏன் ?


இன்று காலை எதிர்பாராத விதமாக கலைஞர் உண்ணா விரதம் மேற்கொண்டார். இதனால் கலைஞர், சண் தொலைக்காட்சிகளின் நாளாந்த ஒளிபரப்பு பாதிப்புக்குள்ளானது. பலதரப்பிலும் உண்ணாவிரத நாடகம் மெகா சீரியலைவிட போரடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நிறைவடைந்தது. கலைஞர், சன் தொலைக்காட்சிகள் வழமைக்குத் திரும்பின

இலங்கையில் திடீர் போர்நிறுத்தம்



இன்று தமிழகத்தில் திமுகவின் பலமான பந்தை கண்டு பயந்து போய், இலங்கையில் போர்நிறுத்தத்தை ராஜபக்சே உடனடியாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே கலைஞர் பிரபாகரன் தன் நண்பர் எனப் பலமாக எச்சரித்திருந்ததாலும், திமுகவினர் பந்து நடத்தின பக்குவத்தையும் கண்டு அச்சமுற்று, அவசரமாக நடுங்கிக் கொண்டே இந்த அறிவிப்பை செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடு முகமாக விரைவில் சென்னையில் மாபெரும் வெற்றிவிழாக் கொண்டாடப்படுமெனவும், இந்த விழாவில் பங்குகொள்ளஉலகின் பலபகுதிகளிலும் இருந்து ஈழத்தமிழர்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், இதில் மானாட மயிலாட கலைஞர்களால் வெற்றி கொண்டான் எனும் மாபெரும் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

- கலைஞர் செய்தி

இன்றைய குரல் - கூரை ஏரி கோழி புடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கருணாநிதி, சீமான், ஜனநாயகம்


செய்தி

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலைஞர்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்... முதல் முறையாக.. உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்..


கலைஞருக்கு விருது வழங்கும் விழா




உடன் பிறப்பே!

தமிழ் காத்த காவலர், எம் இனத்தின் தலைமகன், அருணாநிதி அய்யாவுக்கு விருது வழங்கும் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறோம். நிகழ்ச்சியில் பிரபல கவிஞர் கலந்து கொள்ளும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறும்.
கவியரங்கில் கலந்து கொள்வோர்.
பேரரசு: பொன்முத்து
உரைஞர்: லாலி
தனிமொழி
மான்விழி
பாவி.ஜெய்
ஈழத்துக் கவிஞர்: தங்கராசு

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக்காவலரைப் பாராட்டி தங்கக் கைத்தடி விருது வழங்கப்படும்.
விருதுக்கான காரணத்தை சொல்ல மறந்துட்டோம்.
ஈழத்தமிழ மக்கள் பிரச்சனையில் அதிக தீர்மானங்கள் எழுதியமைக்காக..