கொடுத்து வைச்சவங்க


கொடுத்து வைச்சவங்க. இப்படி நிம்மதியா இருக்கிறாங்க. நமக்கு தட்டுக்கழுவி நாரி முறியுது. இப்பிடி எங்கனாச்சும் வேலை கெடைக்குமுன்னா பேசாம நாமளும் போய் குந்திக்கலாமுன்னு இருக்கேன். தெரிஞ்சா சொல்லுங்கப்பா


கெட்டிக்காறன் புழுகு


'கெட்டிக்காறன் புழுகு எட்டு நாளைக்கு' என்டு எங்கட ஊரில சொல்லிறவ.

இப்ப அதுக்கு என்ன என்டிறியளோ?


தமிழ்ச்செல்வன தாங்க இனங்கண்டுதான் தாக்கினதென்டு 02.11.07 ல சொன்ன சிறிலங்கா அரசின்ர பாதுகாப்பு அமைச்சு, நாலு நாளில ( 06.11.07) பிளேட்ட மாத்தி, தாங்க தமிழ்ச்செல்வனத்தாக்கேல்லையாம். ஆனா புலித்தலைவர்கள் இருக்கினமென்ட தகவல் கிடைச்சதனாலதானாம் தாக்கினவை.


இது என்ன கதையென்டு விளங்கேல்ல. ஆருக்கும் விளங்கினா கொஞ்சம் சொல்லுங்கோ..

மரணத் தீயும், மாரித்தவளைகளும்.